செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும்- திருநாவுக்கரசர்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #18mlacase #Congress #Thirunavukkarasar

மாலை மலர்

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வரவுள்ளதை வரவேற்கிறேன்.

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக மாநிலம் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்படாததற்கு அம்மாநில அரசும், மத்திய அரசுமே பொறுப்பு. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு வேகமாக செயல்படவேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனை. இதில் கட்சிகளை வைத்து இப்பிரச்சனையை அணுக முடியாது. எனவே தமிழக அரசு போராடி மத்திய அரசை தலையிடச்செய்து தீர்வு காணவேண்டும்.

எஸ்.வி.சேகர் மீது தமிழக காவல்துறைதான் வழக்கு பதிவு செய்தது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்றால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? அல்லது காவல் துறை பயப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.