நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொம்பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 42). இவர் நெய்வேலி என். எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை பற்றி அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்ஜோதி பாசு புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.