செய்திகள்

விஜயேந்திரர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த விஜயேந்திரர் தமிழக மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். #Vijayendrar #TamilAnthem

மாலை மலர்

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கையில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் பிரச்சினையை விட மத்திய அரசு செயல்பாடுகள் செயல்படுத்துவதில் தமிழக அரசு அக்கறை காட்டி வருகிறது. தமிழக அரசை சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்த விஜயேந்திரர் தமிழக மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கை அரசின் புதிய சட்டத்தால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதில் பிரதமர் மோடி தலையிட்டு சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு இதனை கொண்டு செல்ல வேண்டும். ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #Vijayendrar #TamilAnthem