திருமாவளவன் பேட்டியளித்த காட்சி. 
செய்திகள்

இலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி

இலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை:

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். 

சந்திப்பிற்கு பின் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது. சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை  சந்தித்து கோரிக்கை விடுத்தேன். உள்ளாட்சி மன்றங்களில் துணை தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT