செய்திகள்

அரியலூர் தினகரன் அணி கூட்டத்தில் தஞ்சாவூர் எம்.எல்.ஏ. மயங்கி விழுந்ததால் பரபரப்பு

அரியலூரில் தினகரன் அணியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசானை கூட்டத்தில் தஞ்சாவூர் எம்.எல்.ஏ. மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலூர்:

அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று அ.தி.மு.க. தினகரன் அணியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தையன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் எம்.எல்.ஏ.வும், தினகரன் அணியின் பொருளாளருமான ரெங்கசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் மனோகரன் , முன்னாள் எம்.எல்.ஏ. துரை மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ரெங்கசாமி எம்.எல்.ஏ.பேசும் போது, திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து நாற்காலியில் அமர வைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். #tamilnews

SCROLL FOR NEXT