செய்திகள்

பொய் பிரசாரம் செய்யும் ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன்- தம்பிதுரை எச்சரிக்கை

தனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர உள்ளதாக தம்பிதுரை எச்சரித்துள்ளார். #LokSabhaElections2019 #Thambidurai

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் போட்டியிடுகின்றனர். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் மீது மற்றொருவர் விமர்சனக் கணைகளை வீசி வருவதால் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.

அவ்வகையில், சமீபத்தில் தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பேசிய திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு சொந்தமான 45 கல்லூரிகள் இருப்பதாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதன்பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரும் தங்கள் பிரசாரத்தில் இதனை குறிப்பிட்டனர்.

இந்நிலையில் கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை புதுக்கோட்டை மாவட்டம் நவம்பட்டியில் அளித்த பேட்டி வருமாறு:-