பாரளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தமிழக அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. ஆனால் தமிழக அரசு செயல்படாமல் உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான கருத்துகளை கூறி வருகிறார். எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது வாடிக்கையானது தான்.
தற்போது குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று உலக சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இதுதான் அவர் மக்கள் மீது வைத்துள்ள அக்கறை.