உத்தமபாளையம்:
தேவாரம் அருகே உள்ள செல்லாயிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுகுமார். லாரி டிரைவர். இவரது மகன் செந்தமிழன் (வயது 11). இவன் வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையில் தொட்டில் கட்டி விளையாடி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அவனது கழுத்தில் சேலை சிக்கி இறுக்கியது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே செந்தமிழன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.