செய்திகள்

ஜம்மு காஷ்மீர் - ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு

ஜம்மு காஷ்மீரின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் பயங்கரவாதிகள் சீலர் கையெறி குண்டுகளை வீசியதால பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வசித்து வருபவர் முஷ்டாக் ஷா. இவர் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

இன்று அவரது வீட்டின் முன்பகுதியில் உள்ள லானில் பயங்கரவாதிகள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயமேற்படவில்லை. தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Tamilnews