அன்சாருல்லா என்ற பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற செய்வதற்கான நடவடிக்கைகளில் சிலர் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக, மத்திய உளவுத்துறை மூலம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் நாகையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், லேப்-டாப்கள் மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலான பேனர்கள், நோட்டீசுகள், புத்தகங்கள் என பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகையைச் சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் பிடிபட்ட சையது முகமது புகாரியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.