செய்திகள்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சிறப்பு யாகம்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சித்திபேட் மாவட்டம் ஏராவல்லி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் சத்ரு வேத பரஸ்பர மகாருத்ர சகஸ்ர சண்டியாகம் நடத்தி வருகிறார். #ChandrasekaraRao

மாலை மலர்

ஐதராபாத்:

தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகரராவ் அம்மாநிலத்தின் வளமைக்காகவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பிரம்மாண்டமான யாகங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அவ்வகையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சித்திபேட் மாவட்டம் ஏராவல்லி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் சத்ரு வேத பரஸ்பர மகாருத்ர சகஸ்ர சண்டியாகம் நடத்தி வருகிறார். இந்த சிறப்பு யாகத்தை

100-க்கும் மேற்பட்ட பண்டிதர்கள் நடத்தி வருகிறார்கள்.

5 நாட்கள் நடைபெறும் இந்த யாகத்தில் 2-ம் நாளான நேற்று மகா ஆரத்தி, மந்தரபுஷ்பம் ஆகிய நிகழ்ச்சியில் சந்திர சேகரராவ் , அவரது மனைவி ஷோபாராவ் கலந்து கொண்டனர். #ChandrasekaraRao