தமிழக செய்திகள்

இறுதி மூச்சு உள்ள வரை அதிமுகவில்தான்: தங்கமணி

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என நினைத்து உயிர் மூச்சாக பணியாற்றி வருகிறேன். எனது இறுதி மூச்சு உள்ள வரை அதிமுகவில்தான் இருப்பேன்.

அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி. மைத்ரேயன் போன்றோர் திமுக-வில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரான தங்கமணி அதிமுகவில் இருந்து இருந்து விலக இருப்பதாக தவல் வெளியானது.

இந்த நிலையில் "இறுதிவரை எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என நினைத்து உயிர் மூச்சாக பணியாற்றி வருகிறேன். எனது இறுதி மூச்சு உள்ள வரை அதிமுகவில்தான் இருப்பேன்" என தங்கமணி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT