சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் தவெக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா புகார் மனு அளித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு காவல்துறை முறையாக பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆதவ் அர்ஜூனா கூறுகையில்," விஜய் எங்கு பிரச்சாரம் செய்கிறார் என்பதை விளம்பரப்படுத்தாமலேயே மக்கள் தானாக வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின், உதயநிதி எந்த தொந்தரவும் இல்லாமல் பிரச்சாரம் செய்கின்றனர். எங்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை?" என்றார்.