தமிழக சட்டசபைக்கு வரும் 23-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவுகிறது.
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.
இந்நிலையில், சட்டசபைத் தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஓமலூர் பகுதியில் ஒரு vox pops நடத்தினோம்.
சுமார் 40 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக அ.தி.மு.க.விற்கு 20 பேரும், தி.மு.க.விற்கு 17 பேரும், த.வெ.க.விற்கு 2 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு ஒருவரும் வாக்களிப்பதாக தெரிவித்தனர்.
இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் மட்டுமே தெரியவரும்.