மிசாவில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சையாகின.
அமைச்சரின் இந்தப் பேச்சு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் சட்டமன்ற பேச்சை கண்டித்து திமுகவினர் நேற்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, அமைச்சர் நிர்மல்குமார் குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ஆ.ராசாவின் பேச்சைக் குறிப்பிட்டு அமைச்சர் நிர்மல் குமார் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“மேடைபோட்டு என்னை பற்றியும், எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா மு.க. ஸ்டாலின்?
நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழ்நாடு மக்கள், குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள்?
எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு.
தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா?
திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர்.
அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா ?
குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.
நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழ்நாடு அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.