தமிழக செய்திகள்

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

அரசைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதங்களை பின்பற்றும் உரிமையை வழங்குகிறது.1995 முன்மொழியப்பட்ட திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை விளைவிப்பதாக உள்ளது.

மாலை மலர்

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், 1995ம் ஆண்டு வக்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் சட்ட முன்வடிவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், அரசைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதங்களை பின்பற்றும் உரிமையை வழங்குகிறது.

1995 முன்மொழியப்பட்ட திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பை விளைவிப்பதாக உள்ளது என குறிப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, முன்மொழியப்பட்ட எல்லை நிர்ணயத்தைச் சுற்றியுள்ள பிரச்சனை குறித்த எங்கள் குறிப்பாணையை வழங்க, பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களுடன் சேர்ந்து, உங்களுடன் ஒரு சந்திப்பைக் கேட்டுள்ளேன். இது சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் தீர்மானங்களைத் தொடர்ந்து நடக்கிறது.

முன்னர் குறிப்பிட்டது போல, எங்கள் மக்களுக்கு இந்த முக்கியமான பிரச்சினையில் எங்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை தெரிவிக்க நாங்கள் அவசரமாக உங்கள் நேரத்தைக் கோருகிறோம். உங்கள் விரைவான பதிலுக்காகக் காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hon'ble PM Thiru @NarendraModi,I have requested a meeting with you, alongside MPs from various parties, to present our memorandum on the concerns surrounding the proposed delimitation. This follows resolutions from the #JointActionCommittee meeting for #FairDelimitation in… pic.twitter.com/kkSoqgNjmG