சென்னை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
சுதேசி இயக்கத்திற்கு இலக்கணமாய்த் திகழ்ந்து, தியாகத்தின் முழு உருவான 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளில் அவரது தியாகத்தைப் போற்றிடுவோம். தற்சார்பு-தன்னிறைவு போன்றவற்றை உண்மையாக நெஞ்சில் ஏந்தி செயல்பட்ட அவரது வழிநடப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.