தமிழக செய்திகள்

அடிப்படை வசதி இல்லாததால் பெண் தரக்கூட தயக்கம் - குமுறும் கிராம மக்கள்

கிராமத்தில் சுமார் 120 குடும்பம் வசிக்கின்றன.தங்கள் ஊரே ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுவதாக கிராம மக்கள் புலம்புகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் நிலவுக்கு சென்று வரும் நிலைக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஆனால், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னகார மேடு கிராமம், வளர்ச்சியின்றி பின்தங்கியுள்ளதாக குமுறுகின்றனர் ஊர் மக்கள்.

கிராமத்தில் சுமார் 120 குடும்பம் வசிக்கின்றன. கிராம மக்கள் சொல்லும் சொல் கேட்டால் எங்கள் கிராமத்தில் வாழ எங்களுக்கு உகந்த இடமில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.

காரணம் என்னவென்றால், குடிக்க நீரின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு மற்ற கிராமங்களில் உள்ள சாலை வசதி, போக்குவரத்து வசதி, நியாய விலைக்கடை கூட இல்லை என குமுறல் சத்தம் அதிகாரிகளுக்கு கேட்காமல், அங்குள்ள மக்களின் காதுகளுக்கு மட்டுமே கேட்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

எனவே தொழில்நுட்ப ரீதியாக உலகம் முன்னேறி வரும் காலத்தில்.. தங்கள் ஊரே ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்படுவதாக சின்னக்காரமேடு கிராம மக்கள் புலம்புகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம் என்பதால் பெண் தரக்கூட தயங்குவதாக நொந்துபோய் உள்ளனர் சின்னகார மேடு கிராம மக்கள்.

SCROLL FOR NEXT