தமிழ்நாடு செய்திகள்

சாலைத் திட்ட பணிகளை தொடங்கி வைத்த விஜய் வசந்த் எம்.பி.

பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்ட பணிகள்.நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜூபிடர் உதயம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி.உதயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.25 கோடி மதிப்பிலான 2 சாலை திட்ட பணிகளை தொடங்கி வைத்தேன்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ஜூபிடர் உதயம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.டி.உதயம், அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.