தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திருமாவளவன் தங்கியுள்ள மீனம்பாக்கம் தனியார் ஓட்டலுக்கு தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வந்துள்ளார்.
விசிக ஆதரவு கடிதத்தை பெற்றுக் கொள்வதற்காக ஆதவ் அர்ஜுனா வந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
தவெக ஆட்சியமைக்க விசிக தலைவர் திருமாவளவன் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.