தமிழக செய்திகள்

சென்னை ஆவடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

ஒப்பந்த தொழிலாளர்களான மோசஸ் மற்றும் தேவன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

சென்னை ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆவடியில் உள்ள மத்திய அரசின் ஓ.சி.எஃப் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.

கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கிய ஒப்பந்த தொழிலாளர்களான மோசஸ் மற்றும் தேவன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மயங்கி கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.