வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் செலுத்தும்படி வருமான வரிததுறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.
2019-ல் பிறப்பிக்க வேண்டிய உத்தரவை 2022-ல் பிறப்பித்துள்ளதால் ரத்து செய்ய வேண்டும் என விஜய் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
வருமான வரிச் சட்டப்படி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் அவரது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்ற வழக்கில் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.