234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்குமுன்பாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்களைத் திரும்பபெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் பார்வையாளர் வரும் வரை ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை நிறுத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்து இருந்தார்.
பல்வேறு புகார்கள் முன் வைக்கப்பட்டதால் ஆதவ் அர்ஜுனா மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொது பார்வையாளர் முன்பு மனு மீண்டும் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.