மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் போலி கடிதம் கவர்னரிடம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் அல்லது அவரை வளைத்து போட்டு அவர்களுக்கு ஆதரவாக கடிதம் வழங்கி த.வெ.க.வினர் குதிரை பேரம் நடத்தி இருக்கலாம் என்றும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் டி.டி.வி.தினகரன் புகார் மனு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அமமுக எம்எல்ஏ காமராஜ் தவெகவிற்கு ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போட்டதாக கூறும் வீடியோவை எடுத்தது யார்?
* எங்கு வைத்து எடுக்கப்பட்டது? வீடியோ எடுத்தது விஜயா? செங்கோட்டையனா? ஆதவ் அர்ஜுனாவா? சொல்லுங்கள்
* காமராஜ் கையெழுத்திட்டதாக கூறும் அந்த ஆதரவு கடிதம் எங்கே?
* இந்த வீடியோவின் ஒரிஜினல் கிடைக்குமா? இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக இருக்கலாம்.
* காமராஜ் கையெழுத்து போடுவது போன்ற வீடியோ AI-ஆக கூட இருக்கலாம்.
* அமமுக எம்எல்ஏ தவெகவுக்கு ஆதரவு என்ற செய்தியை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
* முதலமைச்சர் ஆவதற்கே ஃபோர்ஜரி செய்து கொண்டிருக்கிறார் விஜய்
* காமராஜின் கையில் இருக்கும் கயிறு.. புகைப்படத்தை வைத்து ஏஐ வீடியோ உருவாக்கலாமே.
* விஜய் நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ்.
* கையெழுத்தை வாங்கிவிட்டு எம்எல்ஏ காமராஜையும் கூடவே அழைத்து சென்று இருக்கலாமே?
* ஒரிஜினல் ஆதரவுக் கடிதம் எங்கே? அதை காண்பிக்க முடியுமா? யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள்.
* தவெக தரப்பில் காமராஜிடம் பேசப்படவே இல்லை. குதிரைப்பேரம் பேசவே போலிக்கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
* போலி கடிதம் விவகாரத்தை சும்மா விடமாட்டேன்.
* தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் பேரழிவு உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.