தமிழக செய்திகள்

சுங்கச்சாவடியில் இலவச அனுமதி கேட்டு செஞ்சியில் வர்த்தகர்கள் கடையடைப்பு

பழக்கடைகள், பூக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செஞ்சி திண்டிவனம் தேசிய நெடுஞ் சாலையில் நங்கிலிகொண்டான அருகே புதிய சுங்கச்சாவடி சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இதில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தபடி சுங்கச்சாவடி சுற்றி 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளவர்களுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும் என செஞ்சி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைமையில் அனைத்து சங்கங்கள் இன்று செஞ்சி நகரில் கடையடைப்பு மற்றும் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் என அறிவித்திருந்தனர்.

அதன்படி செஞ்சி நகரில் டீக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. 10 மணி அளவில் செஞ்சியில் இருந்து வாகனங்களுடன் ஊர்வலமாக சென்று சுங்கச்சாவடி முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனால் செஞ்சி நகரம் மற்றும் சுங்கச்சாவடி வரை செஞ்சி டி.எஸ்.பி. செந்தில்குமார் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT