சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா (102), கடந்த சில நாட்களாக சளி-இருமல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கரய்யா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இந்நிலையில், சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தியாகி சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் பொன்முடி ஆகியோரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.