அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* கட்சி கட்டுப்பாட்டை மீறியதாலும் அகங்காரத்தின் காரணமாகவும் செங்கோட்டையன் வெளியேற்றப்பட்டார்.
* செங்கோட்டையன் திமிர் பிடித்தவர். மோசமான குணம் படைத்தவர்.
* கட்சித் தொண்டர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டவர் செங்கோட்டையன்.
* செங்கோட்டையன் மீது அவரது மனைவி, மகன் புகார் அளித்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டது.
* ஜெயலலிதாவை செங்கோட்டையன் மதித்தே இல்லை. செங்கோட்டையன் மோசமான மனிதர் என ஜெயலலிதா கூறினார்.
* எனது அமைச்சரவையில் இடம் பெறுவதற்காக செங்கோட்டையன் கண்ணீர் வடித்தார்.
* முதலமைச்சராக இருந்தபோதே ஆதாரங்களை சேகரித்து விட்டேன். செங்கோட்டையனுக்கு எதிராக அவ்வளவு ஆதாரம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.