தமிழக செய்திகள்

சட்டசபை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு: மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம்

உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-வது நாள் அமர்வு தொடங்கியது

மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசுவாமி, வீராசாமி, சுவாமிநாதன், ஆறுமுகம், கண்ணன், நாஞ்சில் முருகேசனுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன், இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.