அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என முதலமைச்சர் விஜயும் கூறினார்.
* முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்.
* அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடம் பெறுவதற்கான சூழல் இல்லை.
* அதிமுகவிற்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
* அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடமளித்தால் ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.