தமிழக செய்திகள்

த.வெ.க.விற்கு ஆதரவா? நாளை காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- திருமாவளவன்

வி.சி.க நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்ட பிறகே ஆதவு குறித்து முடிவு? செய்யப்படும்.

சென்னை:

த.வெ.க. ஆதரவு கோரியுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி என்னமாதிரியான முடிவை எடுக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையல், செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில்,

இன்று மாலை 5 மணிக்கு இணையவழியில் வி.சி.க. உயர்நிலை குழு கூட்டம் நடைபெறுகிறது. வி.சி.க நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்ட பிறகே ஆதவு குறித்து முடிவு? செய்யப்படும். இன்று மாலை ஆலோசனைக்கு பிறகு நாளை காலை முடிவு அறிவிக்கப்படும். த.வெ.க.விற்கு ஆதரவா? இல்லையா? என வி.சி.க. இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.