சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை.
* குடிநீரில் கழிவுநீர் கலந்து இருந்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பர். ஆனால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* உணவுப்பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளார்.
* உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன்பு மீன் சாப்பிட்டுள்ளார்கள்.
* இந்த பகுதிகளில் தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சில மணி நேரத்தில் தெரிந்து விடும் என்று அவர் கூறினார்.