தமிழ்நாடு செய்திகள்

உடுமலை அருகே பேக்கரியில் பயங்கர தீ விபத்து: ரூ.20லட்சம் பொருட்கள் சேதம்

எதிர்பாராதவிதமாக பேக்கரி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் பேக்கரி ஒன்று உள்ளது. இன்று அதிகாலை எதிர்பாராதவிதமாக பேக்கரி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி கடை முழுவதும் எரிந்தது.

இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் பேக்கரியில் இருந்த கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றினர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் தீயில் கடையில் இருந்த பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமாகின. அவற்றின் மதிப்பு ரூ.20லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்புதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.