தமிழக செய்திகள்

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- ஒருவர் உயிரிழப்பு

வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்.பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயணைப்பு மீட்பு பணிகளில் சிக்கல்.

விருதுநகர் அடுத்த கோவில் புலிக்குத்தி பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார். மேலும், 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் தீயணைப்பு மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT