தமிழ்நாடு செய்திகள்

பேருந்து, புறநகர் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட்- டெண்டர் அறிவிப்பு

தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரிக்கை.க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்.

மாலை மலர்

சென்னையில் பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதற்காக, தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியுள்ளது.

இந்த செயலியில் க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.