தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம்

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் நகரப் பகுதிக்குள் பஸ் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை நகரை சுற்றிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாலை மலர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் நகரப் பகுதிக்குள் பஸ் கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரை சுற்றிலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 13 இடங்களில் தற்காலிக விவசாயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த விவரங்களையும் போலீசார் ஒளிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

போக்குவரத்து கழகம் சார்பிலும் தற்காலிக பஸ் நிலையம் குறித்த விவரங்களை அறிவித்த வண்ணம் உள்ளனர்.