தமிழக செய்திகள்

சென்னை மெட்ரோவில் வாட்ஸ் அப் டிக்கெட் சேவை முடங்கியது

மெட்ரோ ரெயிலில் பயணிக்க வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக முடங்கியது.பயணிகள் பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறலாம்.

மாலை மலர்

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்க வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக முடங்கியது.

எனவே, அனைத்து பயணிகளும் CMRL மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.