தமிழ்நாடு செய்திகள்

பேக்கரியில் பப்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கிரி கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் உள்ள பேக்கரியில் பப்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கிரி கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேக்கிரி கடைக்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.