அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்க தூய்மை காவலர்கள் இல்லம்தோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக மாதாந்திர மதிப்பூதியம் 3600 ரூபாயிலிருந்து, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.