தமிழக செய்திகள்

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தேவையான உதவிகளையும் அரசு செய்து தரவேண்டும். போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாலை மலர்

பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்மாவட்ட வரலாற்றில் பதிவு செய்யப்படாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவாக காட்சியளிப்பதோடு எங்கும் போய்வர முடியாத அளவிற்கு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்று போக்கு இல்லாத இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், பள்ளிகளில் பொதுமக்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடை, போர்வைகள் போன்றவைகளை வழங்குவதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்து தரவேண்டும்.

மேலும் வீடுகளிலிருந்து வெளியே வரமுடியாமல் துண்டிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான பால், குடித்தண்ணீர், ரொட்டி, பெட்ஷீட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். வெள்ளப்பகுதிகளில் அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு என்.ஆர்.தனபாலன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.