தமிழக செய்திகள்

வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை... மு.க.ஸ்டாலின்

மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாள் இன்று.பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம்!

மாலை மலர்

சென்னை:

மகாகவி பாரதியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே!" எனத் தமிழை வாழ்த்தி, தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம்!

வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.