சென்னை :
சென்னை எண்ணூர் பகுதியில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவ பரிசோதனை செய்தார்.
எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பசுமைத் தாயம் அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பொதுமக்களை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.