சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடல் கொள்ளையர்களின் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
நேற்று இரவு தமிழகத்தின் நாகை மாவட்ட மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது இரும்பு கம்பி, கட்டை ஆகியவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கினர். இதனால் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இலங்கை கடற்கொள்ளையர்களின் அத்துமீறிய செயலை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதுகாப்பாக நடைபெற தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.