தமிழ்நாடு செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த தடை

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரை சேர்த்ததற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.