தமிழ்நாடு செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொண்டு வந்தால் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்: எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.அவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்க வேண்டும்.

மாலை மலர்

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு-ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது.

அவை நடவடிக்கையில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேல்-சபையில் 3-ல் 2 பங்கு ஆதரவு பா.ஜ.க. அரசுக்கு இல்லை என்பதால் மசோதாவை அங்கேயே தோற்கடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.