தமிழ்நாடு செய்திகள்

கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு

மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது, 10ம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.