தமிழ்நாடு செய்திகள்

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு உடல்பாதித்த 21 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்

பர்கர் சாப்பிட்ட மாணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கடையில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அதே கடையில் ஷவர்மா சாப்பிட்டு உடல் நலம் பாதித்த நிலையில் கடந்த 17 மற்றும் 18-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நாமக்கல் சேலம் சாலையில் உள்ள கடையில் பர்கர் சாப்பிட்ட கல்லூரி மாணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் ஷவர்மா சாப்பிட்டு உடல்நிலை பாதித்த நிலையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.