பெரம்பூர்:
சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இருக்கல்லூரி மாணவர்கள் திடீரென ரெயில் நிலையத்தில் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
மாணவர்கள் மோதல் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.