த.வெ.க. ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது பிற உறுப்பினர்கள் பேசிய நிலையில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து விஜய் பேசியதாவது:-
த.வெ.க. அரசு மதச்சார்பற்ற அரசாக தான் செயல்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் த.வெ.க. ஆட்சியிலும் தொடரும்.
த.வெ.க. அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு இல்லை.
இதனிடையே, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா எழுப்பிய கேள்விக்கு I will think about it என முதலமைச்சர் விஜய் கூறினார்.