நிதியமைச்சர் மரிய வில்சன் நிதியமைச்சர் மரிய வில்சன்
தமிழக செய்திகள்

தனிநபர் மீதான கடன் ரூ. 1.28 லட்சம்: நிதிநிலை வெள்ளை அறிக்கையில் அமைச்சர் மரிய வில்சன் தகவல்

தமிழகத்தில் பிறக்கும் குழந்தை 1 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு முன்னதாகவே, 1.28 லட்சம் ரூபாய் அதன்மீது கடன் சுமத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக கடந்த மாதம் 10-ம் தேதி பதவி ஏற்றார். அப்போது தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

இதன்படி தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழ்நாடு அரசு வட்டி மட்டும் ஆண்டுக்கு 67 கோடி ரூபாய் செலுத்துகிறது.

* தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 13.18 லட்சம் கோடி ரூபாய்.

* தனிநபர் மீதான கடன் ரூ. 1.28 லட்சம் ஆகும்.

* அண்டை மாநிலங்களை விட தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டியும் குறைவாக உள்ளது.

* பரந்த இயற்கை வளங்கள் இருந்தும் வருவாயை பெருக்கவில்லை.