தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது 14 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பின்படி,
“நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் - பிரவீன் குமார்,
திருச்சி மாவட்ட ஆட்சியர் - பிரதீப் தயாள்,
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் - வந்தனா,
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் - பத்மஜா,
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் - மதுபாலன்,
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் - பிரியா,
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் - ஆனந்த்மோகன்,
மதுரை மாவட்ட ஆட்சியர் - ஆகாஷ்
தேனி மாவட்ட ஆட்சியர் - ஆர்.வைத்தியநாதன்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் - பிரதாப்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் - சரவணன்
வேலூர் மாவட்ட ஆட்சியர் - லீலா அலெக்ஸ்,
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் - ரேவதி,
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் - வீரப்பன்,
பொது மற்றும் மறுவாழ்வு சிறப்பு செயலர் - சுந்தரவல்லி,
மதுவிலக்கு கலால் ஆணையாளர் - பூஜா குல்கர்னி,
பசுமை எரிசக்தி கழக மேலான் இயக்குநர் - ஸ்ரீதர்,
பாடநூல் நிறுவன மேலான் இயக்குநர் - சஜீவனா,
ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.